Monday, November 14, 2011

பதிவுலகில் கட்டபொம்மன்!!!

ஏற்கனவே பதிவுலகில் பராசக்தி உலவுகிறாள். இப்பொழுது பதிவுலகில் கட்டபொம்மனும் வந்துவிட்டார்.
---------------------------------------------------
கட்டபொம்மன்:-
பேஸ்புக், ட்வீட்டர், ஹை5, மைஸ்பேஸ் ஹா. நெற் கணக்சன் இருக்கிறது. குரோமும் இருக்கிறது. உனகாக ஏன் எழுதவேண்டும் பிளாக். என்னோடு நெற்கேவ் வந்தாயா? காசு கொடுத்தாயா? குறோம் அப்பிளிகேசன் டவுண்லோட் பண்ணிதந்தாயா?  பிளாக்கிற்கு வந்தாயா? போஸ்ட் போட கற்றுதந்தாயா?  அங்கு ரெம்பிளோட் மாற்ற கஸ்டப்பட்ட எனக்கு உதவியாவது செய்தாயா?  அல்லது நீ என் பாலோவரா? லைக்கொடுத்தவனா? மரை கழண்டவனே. எதற்கு கேட்கிறாய் பதிவு? யாரைக் கேட்கிறாய் நல்ல பதிவு? என்னை மாதிரி அரைகுறை போஸ்ட் எழுதும் என் நண்பர் கூட்டத்திற்கு லிங் கொடுத்து விடுவேன் ஜாக்கிரதை.


துரை:-
Shut Up. ஹக்கேர் வைத்து உன் ஈமெயிலை இலையான் மொய்க்க வைத்து விடுவேன்.

கட்டபொம்மன்:-
அப்படியா? ஹாஹாஹாஹாஹா
பலே! நீ அனுப்பிய ஹக்கர் மிகவும் புத்திசாலி. என் பிளாக்கை அழிக்கும் நோக்கத்தோடு யாரும் தலை காட்டியதில்லை இந்தப்பக்கம். பிளாக்கின் பெருமை தெரிந்தவன் அவன். ஆனால் இது போன்று கூற இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. கூறிவிட்டதாக என்முன்னே கூறிய உன்னை இனிமேலும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். இதே அடுத்த பதிவு எழுத ஆரம்பிக்க போகிறேன். அடக்கு அடக்கு என்று இவனாவது படிக்கட்டும் என்ற முறை தடுக்கிறது.


துரை:-
என்ன அடுத்த பதிவு எழுத போகிறாயா? அது ஆபத்துக்கு அறிகுறி. (உனக்கில்லை!!! எனக்கு) இப்பவே தலை கிர் எங்கிது..


கட்டபொம்மன்:-
என்ன? இப்பவேவா???.

1 comment: