ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சையன்ஸ் படம் பார்த்த திருப்தி.. ஆனால் பூரணமில்லை.
ஆரம்பத்தில் போதிதர்மன் யார்? என்று கதை போகும். இந்தியாவின் பல்லவ சாம்ராச்சியத்தின் 3ம் இளவரசனே போதிதர்மன். சண்டை, மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற இவர் சீனா செல்கிறார். அங்கே மக்கள் முதலில் இவரை வெறுக்கின்றனர். ஆனால் சூர்யா (போதிதர்மன்) அவர்களுக்கு ஏற்பட்ட தொற்றுநோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கிறார். அதனால் இவரை மக்கள் மதிக்கின்றனர். பின் இந்தியா திரும்ப விரும்பும் போது சிலர் இவரின் உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டால் நாடு வளம் பெறும் என சொல்வதை நம்பி விசம் வைத்துவிடுகின்றனர். சூர்யா விசம் என தெரிந்தும் உண்டு இறக்கிறார்.
பல்லவ சாம்ராச்சியத்தை காட்டும் போது செய்யப்பட்ட போது செய்யப்பட்ட கிராபிக்ஸ் செமையாக இருக்கும். தசாவதாரத்தில் கோயில் கோபுரத்திலிருந்து கமரா மூவ் ஆகும் காட்சி இருப்பது போல இங்கு அந்நகரின் போல் செல்லும் காட்சி அருமை. ஆனால் கமரா மூவ்மென்ட் வேகமாக செல்வதால் படத்தின் குவாலிட்டி குறைவாக தோன்றுகின்றது.
அடுத்து இன்றைய சீனாவில் ஒப்பிரேசன் ரெட் பற்றிய விவாதம் நடைபெறும். அடுத்து இன்றைய சூர்யா.... சேர்க்கஸ்ஸில் வேலை செய்கிறார். சேர்க்கஸ்ஸிற்கு பார்வையாளர்களை வரவழைக்க ஒரு பாட்டு. சூர்யா சேர்க்கஸ்ஸில் வேலை செய்வதாக காட்டப்பட்டாலும் சில இடத்தில் மட்டுமே சேர்க்கஸ் செய்கிறார்.(அதுவும் 3 பந்தை மாற்றி மாற்றி வீசுவது, வளையம் சுற்றுவதோடு சரி) மற்றபடி முதலாளி மாதிரி காட்டப்படுவது ஓவர். பிறகு சுதாவின் (ஸ்ருதி) அறிமுகம்.. சூர்யாவோடு பழகி காதலிப்பதாக நடிக்கிறார். நடிப்பது தெரிந்ததும் வழக்கம் போல சூர்யா கோபப்படுவதும் பாட்டுப்பாடுவதும் வழமைபோலவே. யம்மா யம்மா பாடலில் சூர்யா சூப்பர்யா...
சூர்யாவிடம் DNA வை எடுக்கவே தான் வந்ததாக கூறி விளக்கப்படுத்துவது அற்புதம். ஒப்பிரேசன் ரெட்டை நாயில் தொடங்குவது என்ன
லாஜிக். நுயெனின் நடிப்பும் சூப்பர். நாயில் வைரஸ் பரவுவதை காட்ட ஓடிஓடி நாயை வீடியோ எடுத்திருக்கிறார்கள்... பாவம்.... நாய்.....
ஸ்ருதி, சூர்யாவை துரத்தும் காட்சியில் நுயெனின் பார்வை வசியத்தால் ஏற்படும் விபத்து, சண்டைக்காட்சி நன்று.. ஆனால் ரொம்ப ஓவர்...
நாய்க்கு பரவிய வைரஸ் மக்களுக்கும் தாக்கி இறக்கும் போது சூர்யாவின் DNAவை துண்டி (சூர்யா போதிதர்மரின் வழி வந்தவராம்) நோய் கிருமிக்கான மாற்று மருந்தை கண்டுபிடித்து ஒப்பிரேசன் ரெட்டையும் நுயெனையும் அழித்து பேட்டி கொடுக்கிறார். படம் முடிக்கிறது.
சந்தேகங்கள்...
- போதிதர்மர் விசம் எண்டு தெரிந்தும் சாப்பிடவேணுமா?
- DNAஆய்வு கூடம் ரொம்ப நோர்மலா இருக்குதே!!!
- தமிழ் தெரியாத நுயென் எப்பிடி தமிழ்நாடு முழுக்க சுத்தினார்?
சரி போகட்டும்...
யாரும் மேக்கப் போட்டுக் கொண்டு தண்ணீக்குள்ள இறங்க கூடாது. முன் அந்தி பாடலில் ஸ்ருதிக்கு மேக்கப் போட்டு தண்ணிக்குள்ள இறக்கி ஊடழளந-ரி ளாழசவள எடுத்திருக்கீனம். மேக்கப் போட்டதால பாக்க சகிக்கல. அதோட உச்சி பிரித்து தலை வாருவது ஸ்ருதிக்கு அழகை குறைக்கிறது.
சூர்யாவின் இறுதி சண்டைக்காட்சியில் போதிதர்மர் போல் சண்டை போடும் போது சில இடங்களில் முகத்தில் கஸ்ரப்படுவது தெரிகிறது.
என்னதான் என்றாலும் ஸ்ருதி மற்ற விஞ்ஞானிகளுடன் தமிழ் குறித்து சண்டை போடுவது சிறந்த காட்சி... முக்கியமாக தமிழ் பற்றி கதைக்கும் போது தியேட்டரில் விசில் பறந்தது. கைதட்டல் பலமாக காணப்பட்டது.
ஆக மொத்தம் நல்ல படம்... வித்தியாசமான படம்... வெற்றிப்படம்...
தமிழுக்கு தலை வணங்குகின்றோம்....