Saturday, November 12, 2011

புலம்பெயர்தமிழருக்கு...



வெளிநாட்டு வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்த தமிழர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன். 


முன்னைய காலத்தில்...
'அம்மா யாரோ வந்திருக்கிறாங்க'
லீவில் வந்த அப்பாவை காட்டி
சொல்கிறான் 4 வயது மகன்...
போட்டோவில் பார்த்த
அப்பாவின் முகம்
மாறியிருந்தது
வெளிநாட்டு ஸ்டைலில்...

இன்றைய காலத்தில்...
அதே அப்பா
அங்க பார்
அங்க பார் என அதட்டும் அம்மா
அருகிலில்லை அப்பா
ஸ்கைப்பில்...
கணீர் குரலும்
கரகரக்கும் குரலாக
கேட்டுவந்த பிள்ளை
லீவில் வந்த அப்பாவிடம்
'என்னப்பா குரல் சரியாயில்லையா?'

No comments:

Post a Comment