Friday, December 31, 2010

பிடிச்ச 6 படம் 2010

2010 ல் தமிழ் திரையுலகிற்கு அண்ணளவாக 150 படங்கள் வந்தன என்று கேள்விப்பட்டேன். அவற்றில் எனக்கு பிடித்த 6 படங்கள்:-
1.அங்காடித்தெரு
2.எந்திரன்
3.நந்தலாலா
4.மதராசப்பட்டினம்
5.பையா
6.மன்மதன் அம்பு

1.அங்காடித்தெரு
இப்போது இந்தியாவில் ரங்கநாதன் தெருவில் காணப்படும் உண்மை நிகழ்வை படம் பிடித்து காட்டும் யதார்த்த சினிமாவாக காணப்படுகின்றது. பிளாட்போர்ம் மக்களின் நிலை அப்பட்டமாக காட்டப்படுகின்றமை..!! புதுமுகநாயகன் மாதிரி தெரியாமல் தரமான நடிப்பு. அஞ்சலியின் நடிப்பு. என்ன சொல்வது. வசந்தபாலன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர். ஐங்கரன் தயாரிப்பு நிறுவனம் இல்லாவிட்டால் அங்காடித்தெரு கிடைத்திருக்காது.
http://www.rajtamil.com/2010/03/watch-angadi-theru-movie-online.html

2.எந்திரன்
சன் பிக்சஸ் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் தமிழில் வந்த உலக தரமான படம். இவ்வளவும் காணும். சுஜாதாவின் கைவண்ணத்தில் வெளிவந்த மீண்டும் ஜீனோ என்ற நூலை ஓரளவு தழுவியதாக காணப்படுகின்றது. ( முடிவில் மியூசியத்தில் பாதுகாக்கப்படும் போது சிறு பிள்ளை ஏன் இப்படி ஆனது என கேட்ட போது "நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்" என்பது). இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு புதிது. தரமானது.

http://tamilhindimovies.com/2010/10/watch-endhiran-movie-online/

3.நந்தலாலா
தாய்- மகன் இடையில் பாசபோராட்டம். மிஸ்கினின் அஞ்சாதே பாத்ததிலிருந்து இனி மிஸ்கினின் படம் பாக்கிற இல்லைனு இருந்தன். மாத்திப்புட்டான். பைத்தியகாரன் மாதிரியான மிஸ்கினின் நடிப்பு பாராட்டக்கூடியது. எங்க இருந்துதான் அந்த சின்ன பையனை எங்க இருந்து பிடிச்சார். ரொம்ப நல்லா நடிக்கிறானே. தாயை தேடிய பயணத்தில் மிஸ்கினும் பையனும் சந்திக்கும் கதாபாத்திரங்களின் நடிப்புக்கும் இவர்களின் நடிப்புக்கும் இணையில்லை.
இசை இளையராஜா. ராஜா தான் வயலின் இசை தரம். என்ன விருது கொடுக்கிறது.
http://www.rajtamil.com/2010/11/watch-nandalala-movie-online.html

4.மதராசப்பட்டினம்
தமிழகத்தின் வரலாற்றில் ஓரளவும் அக்காலத்தில் பிரிந்த காதலியின் தேடல் என வித்தியாசமான கதைக்களத்தில் நகர்கிறது. இசை உறுதுணையாக அமைந்தது. எல்லாவற்றிலும் தரமாக அமைந்து காணப்பட்டது.
http://www.tamiltwist.com/2010/07/watch-madrasapattinam-movie-online.html

5.பையா
முழு நீள பயணப்படமாக காணப்பட்டாலும் இளைஞர்களின் ரசனைக்கேற்ப லிங்குசாமி இயக்கியுள்ளார். இசையில் யுவன் நடிப்புக்கு கார்த்திஇ தமன்னா என தேர்வு செய்தது லிங்குசாமியின் திறமை.
http://tamilhindimovies.com/2010/04/watch-paiya-tamil-movie-online-free-pre-dvd/

6.மன்மதன் அம்பு
கமலின் கதை வசனத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் சிரிக்கிறதுக்கின்னே படம் எடுத்திருக்கிறாங்கள். பாடல்கள் பரவாயில்லை. இசை ஓகே. வசனம் சூப்பர். கமலின் கவிதை ரொக்ஸ். திரிஸாஇ மாதவன் காதல் - மாதவனுக்கு திரில சந்தேகம். உளவு பாக்க கமல்- கமலின்ர மனைவி விபத்தில சாக மாதவனும் திரியும் காரணம்- நண்பனுக்கு உதவ கமல் பொய்சொல்லி அந்த ஒரு பொய்க்கு 1000 பொய் சொல்லி ........எப்பிடி கமலால மட்டும் இப்பிடி முடியுது!!!
http://www.rajtamil.com/2010/12/watch-manmadhan-ambu-movie-online.html
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வருடம் 2010. வானளாவிய சாதனைகளும், தாங்க முடியாத சோதனைகளுமாக பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாகத் திகழ்ந்தது 2010.
நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூல் என பல துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், விறுவிறுப்பான நிகழ்வுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
இந்த கோலிவுட் 2010 ப்ளாஷ்பேக்கை இசையுடன் துவங்கலாம்.  2010-ன் ஆகச் சிறந்த இசையைத் தந்தவர் எந்தக் கலைஞர்... இந்தப் பட்டியலில் இமான், ஜீவி பிரகாஷ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா என 5 முக்கிய கலைஞர்கள் போட்டி போடுகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா

2010 -ம் ஆண்டில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். பையா படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் நாயகன் யுவன்தான் என மீடியா கொண்டாடியது.
அகில இந்திய அளவில் அதிக சிடிக்கள் விற்பனையான படங்களின் வரிசையில் பையா இடம்பிடித்ததென்றால், யுவன் இசையின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'துளித்துளி...' பாடல் இந்திய அளவில் டாப் 20 பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றது.
நான் மகான் அல்ல படத்திலும் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை.  2010-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் இசையும் பாடல்களும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதையும் மறுக்க முடியாது.
கோவா, சர்வம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் வெற்றி பெற்றன.   2010-ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் யுவனுக்கே உண்டு. மொத்தம் 15 படங்கள்!

ஜீவி பிரகாஷ்குமார்


 2010-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க இசையைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார். ஆரம்பத்தில் அவ்வளவாகப் பிடிபடாத இவருடைய இசை, அங்காடித் தெருவில் கவனம் ஈர்த்தது.
இந்தப் படத்தில் இன்னொரு இசையமைப்பாளரும் இருந்தார். அவர் விஜய் ஆண்டனி. அவள் அப்படியொன்றும் அழகில்லை.. பாடலை அவர்தான் கம்போஸ் செய்திருந்தார். எனவே படத்தின் இசை பெற்ற வெற்றியில் பாதிப் பங்கு அவருக்கே போனது.
அடுத்து ஜீவி பிரகாஷ்குமார் இசையில் வந்த மதராஸபட்டினம், அவரது திறமையை சரியாக வெளிப்படுத்தியது.  'வாம்மா துரையம்மா...' பாடலும், 'ஆருயிரே...', 'பூக்கள் பூக்கும்...' பாடல்களும் அட சொல்ல வைத்தன.
எம்எஸ் வி பாடிய 'மேகமே மேகமே..' உருக வைத்தது.

 இமான்
 

இவரது இசையில் வெளியான மைனா படப் பாடல்கள், அதற்கு முன் இவர் இசைத் துறையில் செய்த தவறுகளைக் கூட மன்னிக்க வைத்தது. குறிப்பாக மைனா மைனா நெஞ்சுக்குள்ள... மகா இனிமை.   இந்த புதிய இடத்தை அவர் எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்பதே இனி முக்கியம்.


ஏ ஆர் ரஹ்மான்:

விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன் மற்றும் எந்திரன் ஆகிய மூன்று பெரிய படங்களின் இசை ரஹ்மான்தான். இவற்றில் விண்ணைத் தாண்டி வருவாயா இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல.
ஹோசனா..., மன்னிப்பாயா, ஓமனப் பெண்ணே... இதயத்தில் பச்சென்று ஒட்டிக் கொண்டன.  ராவணன் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சொல்லப்பட்ட 'உசுரே போகுதே...' பாடல் கூட செயற்கையாகவே இருந்தது.

ஆனால் ஆண்டின் இறுதியில் அவர் இசையில் வெளியான ரஜினியின் பம்பர் ஹிட் படமான எந்திரன் இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து நொறுக்கியது. குறிப்பாக இசைத் துறையில் இவ்வளவு பெரிய விற்பனை எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்து நி்ற்கிறார்கள்.
இதற்கு ரஹ்மான் இசையைத் தாண்டி, ரஜினி என்ற சாதனையாளரின் புகழும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.   எந்திரனில் அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான விருந்து. குறிப்பாக, இரும்பிலே ஒரு இதயம் மற்றும் கிளிமாஞ்சாரோ கலக்கல் பாடல்கள். இரும்பிலே.. பாடல் ஆரம்பத்தில் சிலருக்கு அவ்வளவாக பிடிக்காமலிருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் பாடல்தான் நம்பர் ஒன்னாக மாறியது இன்னொரு சுவாரஸ்யம்.

இளையராஜா:

இளையராஜா இசையில் இந்த ஆண்டில் வந்தவை மூன்று படங்கள்தான். அவற்றில் பழஸிராஜாவின் ஒரிஜினல் மலையாளப்படம்.
பின்னணி இசையில் தேசிய விருதைப் பெற்ற படம் அது. அதேநேரம், பாடல்களும் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றன. தமிழிலும் மிக இனிமையாக அமைந்தன பாடல்கள்.  நந்தலாலா பின்னணி் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது.
படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், எல்லோரும் ஏகமனதாகப் பாராட்டிய ஒரே அம்சம் இளையராஜாவின் இசைதான்.  இந்தப் படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம்பெற்ற ஒண்ணுக் கொண்ணு துணையிருக்கு... பாடலும், இளையராஜா பாடிய 'தாலாட்டு கேட்க நானும்...', 'மெல்ல ஊர்ந்து...' பாடல்கள் மனசை உருக்கி விட்டன.


இவர்களைத் தவிர, வம்சம் மூலம் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமான தாஜ் நூர் இசை குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. களவாணி படத்தில் எஸ் எஸ் குமரனின் 'டம்ம டம்மா..' பாடல் மறக்கமுடியாதது.



thanks- www.tamilcnn.com

2011 வித்தியாசமான ஆண்டு

இன்று பிறக்கும் 2011-ம் ஆண்டில், ஒரு தேதியை மாதம் மற்றும் வருடத்துடன் இணைத்து எழுதினால், அதில் ஒன்று என்ற இலக்கம் மட்டும் 6 முறை இடம் பெறுகிறது.  அதாவது, இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 11-ந் தேதியை, 11-11-11 என்று எழுதும்போது 6 முறை ஒன்று என்ற இலக்கம் இடம் பெறுவதை காணலாம்.  அதேபோல், இந்த ஆண்டில் 4 தேதிகளில் ஒன்று என்ற இலக்கம் மட்டுமே இடம் பெறுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
ஆண்டின் முதல் நாளே அந்த சிறப்பைப் பெற்று உள்ளது. அதாவது, 1-ம் தேதியான இன்று 1-1-11 ஆகும்.  அதேபோல் ஜனவரி 11-ந் தேதி, 11-1-11 என்றும், நவம்பர் 1-ந் தேதியன்று, 1-11-11 என்றும், நவம்பர் 11-ந் தேதி அன்று 11-11-11 என்றும், முற்றிலும் ஒன்று என்ற இலக்கமே இடம் பெறுவதைக் காணலாம்.
ஏற்கனவே கடந்த 1911-ல் வந்ததுபோல், 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2011-ல்தான் இது போன்று அமைவதால், இந்த நூற்றாண்டின் வித்தியாசமான ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks to- www.tamilcnn.com

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்









Thursday, August 12, 2010

கடவுளே!!!!!!!!!!

எமது ஊர் ஆலயத்தில் (கும்பளாவளை பிள்ளையார் கோவில்,அளவெட்டி) இடம்பெற்ற வாணவேடிக்கை இது........எப்பிடியெல்லாம் செலவு செய்யிறாங்க கடவுளே!!!!!!!!!!
Pollution......Pollution.......Pollution

Monday, May 17, 2010

எருமையில எமன் இல்ல உங்கட போனில தான்..

நேற்று பிளாக்கில ஒரு போஸ்ட் போட்டனான்.இப்ப 2 நாளா போன் வெடிக்கிறத எதிர்த்து.ஆனா இப்ப என்ர முடிவ மாத்தீட்டன் ஏனிண்டா எனக்கும் போன் கோல் வந்தது. அத பாத்ததில இருந்து என்ர போன் ஓஃவ்ல இருக்கு. நான் தப்பீட்டன். ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பாவம் மாட்டுப்பட்டிட்டான். காதுக்குள்ள இருந்து ரத்தம் வடிய ஆஸ்பத்திரியில கிடக்கிறான். எப்பிடித்தான் இப்பிடிப்பட்ட வழிய கண்டு பிடிச்சு செய்யுறானுகளோ தெரியல?.அத செய்தவன் என்ர கையில கிடச்சான் துலைஞ்சான்..
எனக்கு முதல் முதல்ல என்ர பிரெண்ட் அனுப்பின செய்தி இதுதான்..

(அந்த செய்தி..

very important news for all of you. Do not pick up calls Under given numbers.
   
9888308001
    91+9316048121
    9876266211
    9888854137
    9876715587
These numbers will come in red color, if the calls comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.

It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.

----------------------------------------------------------------------------------------
இந்த செய்தியானது 2 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பரப்பப்பட்டதாக எமது இந்திய நண்பர்கள் தெரிவித்தனர்..
இச்செய்தியில் சில தவறுகள் (ஜோக்காக ஆனால் சிந்திக்க).
1."These numbers will come in red color"..அண்ணோய் என்ர Black and White போன் எப்பிடி சிவப்பில நம்பர் வரும்?

2."very high wave length, and frequency".. ஒரு சாதாரண் போனில் 900-1800 ஆகவே frequency உள்ளது.. மனிதனின் காது கேக்க கூடியது அதிகூட 20000Hz ..
--அப்ப எப்புடி கூட frequency வரும்..

3."Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7." இதில் எந்த செய்தி சேவையிலும் இப்படி செய்தி வரவில்லை.. வந்தால் தானே நம்ப முடியும்..

இப்பிடி நினைச்சுக்கிட்டிருந்தன்.ஆனாலும் என்ர பிரெண்டின்ர Black and White போனுக்கும் சிவப்பு கலரில போல் வந்தது.நம்மளுக்கு ரிஸ்க் எடுக்கிறது றஸ்க்கு சாப்பிடுற மாதிரினு நினைச்சு கோலை அட்டன்ட் பண்ணி சொந்த செலவில சூனியம் வைக்கவேண்டாம்.
"BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,"

Sunday, May 9, 2010

ராவணனுடன் ரஹ்மான்..

உசிரே போகுதே : "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது.
சிறந்த பாடல்.ஆனால் பின்னணி இசை மீண்டும் மீண்டும் ஒலிப்பது சரியில்லை.ரஹ்கிற்கு வேற வழியில்ல.சரி அதை பொறுக்கலாம். ஏனெனில் வைரமுத்து இருக்கக்க என்ன பிரச்சினை?? பாடல் வரிகள் பிரமாதம்.
குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
ட்ரம்ஸ்ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார்.இடையிடையே மணியடிக்கிறது.ஏனின்டு புரியல.படம் பாத்தாத்தான் தெரியும்..
http://www.mediafire.com/?00heo4yjjjo

வீரா வீரா : அதிவேக எக்ஸ்பிரஸ் ஒன்றின் வேகத்தை வாத்தியக்கருகளின் மூலம் ஓடவிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “வீரா வீராஇ தீரா தீரா” என்று விஜய் பிரகாஷின் குரல் உச்சஸ்தாயில் எகிறி எகிறி அடிக்கிறது.
"ராமந்தேன் ராவணந்தேன்" என்று கிராமத்து ஸ்டைலில் குரல் ஒலிக்கஇ பின்னணியில் மேற்கத்திய வாத்தியக்கருவிகள் சுருதி சேர்ப்பது ரசனை. பேன் பைப்ஸ்'ன் இசையை அதிரடியாய் பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான். தீம் சாங்காக இருக்கலாம்.
யாருக்குமே கேட்காதவாறு ஒளிந்து கொண்டு குரல் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். இந்த அதிரடி இசை கீர்த்திசாகத்தியா’வின் குரலுக்கு பெரிதாய் வேலைகொடுக்கவில்லை.
http://www.mediafire.com/?z2onnt2wn3b

கோடு போட்டா : இதோ பென்னிக்கு இன்னொரு அதிரடி ஹிட் கிடைத்துவிட்டது. ஹோம் தியேட்டரை அதிர வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஹ்மான் விளையாடி இருக்கிறார். தடக் தடக் என்ற ஆர்ப்பாட்டமான தாளக்கட்டில் தாவிகுதித்து விளையாடும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
"சல்லிக்கட்டில் மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா" என்ற வரிகளில் வைரமுத்துவின் பேனா கூர்வாளாய் மாறி இருக்கிறது. இன்னும் கொஞ்சம்இ இன்னும் கொஞ்சம் என்று பீட்ஸின் ரேஞ்ச்இ ஹை பிட்சை தொட்டிருக்கிறது. பேஞ்ஜோ கருவியின் வேகத்திற்கு ரஹ்மான் சரி வேலை கொடுத்திருக்கிறார். பாடலின் ஆக்ரோஷத்தை விக்ரமின் கண்ணில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
http://www.mediafire.com/?eojjmejymyv

காட்டு சிறுக்கி : "காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி யார் காட்டுசிறுக்கி" என்று ஒலிப்பது அனுராதா ஸ்ரீராமின் குரலா என்று ஒரு நிமிடம் வியந்துதான் போக வேண்டி இருக்கிறது. கீபோர்ட் நோட்ஸ் வெகு ஷார்ப். “காட்டுசிறுக்கிஇ நத்தைக்குட்டி” என வைரமுத்துவுக்கே உரிய துள்ளல் தமிழ் வர்ணனைகளும் இதில் உண்டு.
முதலில் கேடகும் போது ஆரம்ப குரல் யாரை வச்சு எடுத்திருப்பாங்கனு சந்தேகம்.."மாயமாய் போவாளோ" என்று சங்கர் மகாதேவன் கொஞ்சுவது அழகு. எலக்ட்ரானிக் ஆர்கன் கிராமத்து ஸ்டைலில் பயணிப்பது புதுசு. ரஹ்மானின் தேடல் அதிசய வைக்கிறது. இராவணின் பாடல்களில் துள்ளாட்டமான டூயட்டிற்கு இந்தப்பாடல் உத்திரவாதம் அளிக்கிறது.
http://www.mediafire.com/?zjey22y1dv0

கள்வரே : இனிப்புசுவை இல்லாமல் விருந்தா? மெலடி இல்லாத ரஹ்மானின் இசையா? இதோ அதற்கு விடை.. ஸ்ரேயா கோஷலின் குரலில் கஜல் இசையை வெகு இனிமையாய் படைத்திருக்கிறார் ரஹ்மான்."கள்வரேஇ கள்வரே கண் புகும் கள்வரே" என்று பைந்தமிழில் பரவசப்படுத்தி இருக்கிறார் வைரமுத்து.
ஒரு அழகான மாலைப்பொழுதில் ஜன்னலோரம் சாய்ந்தவாறு இயற்கையை ரசித்தபடியே பருகும் தேநீரைப்போல் பரவசமாய் இருக்கிறது இந்தப்பாடல். தலைவனை நோக்கிய தலைவியின் ஏக்கத்தை மிகச்சரியாக இந்தப்பாடல் தனக்குள் பதிவு செய்து இருக்கிறது.
"ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ரூமெண்டல்களை இத்தனை சுகமாக பயன்படுத்த முடியுமா? “வலி மிகும் இடங்கள்இ வலி மிகா இடங்கள் என தமிழுக்கு தெரிகிறதுஇ அது தங்களுக்கு தெரியுமா?” என்று ஒரு பெண் கேட்பது போல் எழுதி இருக்கும் வைரமுத்துவின் விரல்களுக்கு அழுத்தமாய் கொடுக்கலாம் ஒரு முத்தம்.
http://www.mediafire.com/?a0wnqi4tz0g

கடா கறி : “கடா கடா கறி அடுப்புல கிடக்கு” என்று பென்னிதயாள், பாக்யராய், A.R.ரஹைனா, தன்விஷா ஆகியோரது குரலில், குழு பாடலாக ஒலிக்கிறது. இந்தப்பாடல். டிபிக்கல் மலை வம்சத்தினர் பாடுவது போல ஹார்மோனிகா இசை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தங்கையையும் பாடவிட்டிருக்கிறார். இதில்.காடுகள் என்றால் மூங்கிலால் சூழப்பட்டிருப்பதுதானேஇ மூங்கில் இசைக்கருவிகளின் கோர்வையால் இசையின் பின்னணி பின்னப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இருக்கும் கேட்சிங் ட்யூன் அடுத்தடுத்த வரிகளில் இல்லாதது சற்று ஏமாற்றமே. ராவணன் ஆல்பத்தில் சுமாரான பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
http://www.mediafire.com/?mmg4tk20gjd

புதுப்புது சவுண்ட்ஸ்'க்காக் மெனக்கேட்டிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் மணிரத்னத்தின்
படங்களில் மிக ஸ்பெஷலாக இருக்கும் ரஹ்மானின் இசைஇ இந்தப்படத்தின் பாடல்களில் ஸ்பெஷலாக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை கேட்க கேட்க கிறுக்கு பிடிக்க வைக்கலாமோ
என்னவோ?
உங்களுக்கு பிடிச்சிருக்கா?? கிறுக்கில்ல.. பாட்டு...

Saturday, May 8, 2010

என்ன கொடுமை சார் இது..ஏதே ஒரு அவசரத்துக்கு போன் கோல் எடுக்கிற என்ன மாதிரி ஆக்களுக்கு ஆப்பு வைக்கிறதுண்ணே கிழம்பியிருக்கிறாங்க போல பின்ன.- போனுக்குள்ளால உயர் அழுத்த ஒலியை ஏற்படுத்தி ஆக்கள கொல்லீனமாம். இந்த கதைய செல்வராகவனிட்ட சொல்லியிருந்தா இத வச்சு 'ஆயிரம் போன் வெடிக்க வச்ச ஒருவன்' படத்தை 10 வருசம் இயக்கியிருப்பார். இப்ப 2 நாளுக்கு முதல் 5 அல்லது 6 ம் திகதினு நினைக்கிறன். கலைஞர் ரீவியில 10.00 மணிக்கு போடுற விசாரணைனிற கிறைம் தொடரில கெட்போனுக்குள்ளால அதிக சத்தத்தில பாட்டு கேட்டு ஒருத்தன் சாகிறானாம். அத பாத்த ஒரு வெங்காயம் (திட்டுவதற்கு நாம் பயன்படுத்தும்  ஒரு சொல்) கெட்போனை செல்போனா மாத்தீட்டான். அத நம்பி எத்தின பேர் தங்கட போனை ஓவ் பண்ணினவயோ தெரியல??இனிமேல் இப்படி வாற வதந்திகளை நம்பவேணாமுங்கோ!!.

Sunday, May 2, 2010

எய்யாபியாட்லயாகுட்

ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிப்பு ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும். இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன.


27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்
எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,ம ற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கியது.. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பல மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்தது

மேலும் சில படங்கள்

Tuesday, April 27, 2010

மாயா நாகரிகம்/ மாயன் நாகரீகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.


மாயன் எண் முறைமை

மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.


மாயன் கட்டிடங்கள்
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு, தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.


மாயன் வானியல்
மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சட்ங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மாயன் நம்பிக்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.

Sunday, April 25, 2010

நந்தி இல்லாத சிவன் கோயில்


சிவாலயம் என்றால் அங்கு நந்தி நிச்சயம் இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்கு முன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!

ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது, பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை உச்சரிக்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.

இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்) தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரியவில்லை.

சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தனது கன்றுடன் பேசுவதைக் கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப்பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்ம ஹத்யா பாவத்தை போக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
நன்றி-Sri Subramaniar Swamy Alayam(KualaSelangor)

எரிமலை

எரிமலை (Volcano)எனப்படுவது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல், வளி,மண்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளை வெளித்தள்ளும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை சம்பந்தப்பட்டுள்ளது. "வால்கனோ" (volcano) என்ற வார்த்தை இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக்கடவுளான வால்கன் என்பவரது பெயராகும்

பொதுவாக டெக்டோனிக் அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடத்தில் எரிமலைகள் காணப்படுகின்றன. ஒரு மத்திய-கடல் மலைமுகடு, உதாரணத்திற்கு மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, டெக்டோனிக் அடுக்குகள் விலகிச் சென்றதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு உதாரணங்களாக உள்ளன; பசிபிக் நெருப்பு வட்டம் டெக்டோனிக் அடுக்குகள் நெருங்கிவந்து ஒன்று சேர்ந்ததற்கான உதாரணங்களாக உள்ளன. முரண்பாடாக, டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை. பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன . அவை ஆப்ரிக்க ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ கிராண்ட் ரிஃப்ட் மற்றும் ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளுடன் உள்ள ரைன் கிரெபன் பகுதி போன்றவை.

வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள் சூரியமண்டலத்திl உள்ள அனைத்திலும் காணப்படுகின்றன,
உறைபனி கீழுள்ள எரிமலைகள்
உறைபனி கீழுள்ள எரிமலைகள் உறைபனிக் கட்டிகளுக்கு கீழே உருவாகின்றன.
அவை உச்சியிலிருந்து ஓடும் விரிந்த பருமனான எரிமலைக்குழம்பு மற்றும் பலோகனைட்டினால் உருவாகின்றன.
உறைபனிக்கட்டி உருகும்போது, உச்சியிலுள்ள எரிமலைக்குழம்பு குலைவுற்று தட்டையான உச்சிப்பகுதியுள்ள மலையை வி்ட்டுச்செல்கிறது. பின்னர், பருமனான எரிமலைக்குழம்பும் குலைந்து 37.5 டிகிரி கோணத்தைக் காட்டுகிறது. இந்த எரிமலைகள் டேபிள் மலைகள், டுயாக்கள் அல்லது(வழக்கத்திற்கு மாறாக)மொபர்க் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வகையான எரிமலைக்கான மிகச்சிறந்த உதாரணத்தை ஐஸ்லேண்டில் காணமுடியும், இருப்பினும், பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் டுயாக்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லின் மூலவேர், டுயா ஆற்றின் பகுதியில் உள்ள சில டுயாக்களின் காரணமாகவும், வட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டுயா பிரதேசத்தின் காரணமாகவும் டுயா பியூட்டிலிருந்து வந்துள்ளது. டுயா பியூட்தான் முதலாவதாக பகுப்பாய்வு செய்யப்பட்ட நிலவமைப்பு, எனவேதான் அதன் பெயர் இந்த வகையான எரிமலை அமைப்புக்கான புவியியல் இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டது. டுயா மலைகள் மாகாண பூங்காவானது, டுயா ஏரியின் வடக்குப் பகுதியிலும், யுகோன் பிரதேச எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜென்னிங்ஸ் ஆற்றின் அருகாமையிலும் அமைந்துள்ள இதன் வழக்கத்திற்கு மாறான நிலவெளியை பாதுகாக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது.
எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான மற்றொரு முறை எரிமலைக்குழம்பு உமிழ்ந்த மூலப்பொருள்களின் கலவை யாகும், ஏனெனில் இது எரிமலையின் வடிவத்தை மாற்றியமைக்கிறது. எரிமலைக்குழம்பை நான்கு வெவ்வேறு வகை கலவைகளாக விரிவாக பிரிக்கலாம்(காஸ் & ரைட், 1987):
உமிழப்பட்ட எரிமலைக்குழம்பு அதிக விகிதத்தில் 63% சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு பெல்சிக் எனப்படுகிறது.
பெல்சிக் எரிமலைக்குழம்புகள் (டேசைட் அல்லது ரையோலைட்கள்) அதிக பிசுபிசுப்புத்தன்மை உள்ளவையாக இருக்கின்றன (மிகுந்த நீர்மமாக அல்லாமல்) குவிமாடங்களாகவோ அல்லது குறுகிய, தடித்த ஓட்டங்களாகவோ உமிழப்படுகின்றன. பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு சுழல்வடிவ எரிமலைகளையோ அல்லது எரிமலைக்குழம்பு குவிமாடங்களையோ உருவாக்குவனவாக இருக்கின்றன. கலிபோர்னியாவிலுள்ள லாஸன் சிகரம் பெல்சிக் எரிமலைக்குழம்பிலிருந்து உருவானதற்கு ஒரு உதாரணமாகும், இது உண்மையிலேயே ஒரு பெரிய குவிமாடமாகும்.
சிலிக்கான் உள்ள மாக்மாக்கள் மிகவும் பிசுபிசுப்பாக இருப்பதால்,அச்சமயத்தில் இருக்கின்ற ஆவியாதலை படிகமாக மாற்றக்கூடியவையாக இருக்கின்றன, அவை மாக்மா பயங்கரமாக வெடிப்பதற்கும், முடிவில் சுழல்வடிவ எரிமலைகளை உருவாக்குவதற்கும் காரணமாகின்றன. பைரோகிளாஸ்டிக் ஓட்ட இக்னிம்பிரைட்கள் இத்தகைய எரிமலைகளின் அதிக அபாயமுள்ள உருவாக்கங்களாகும், இவை உருகிய எரிமலை சாம்பலின் கலவை என்பதால் காற்றுமண்டலத்திற்குள் செல்ல மிக கனமானவையாக இருக்கிறது, இதனால் அவை எரிமலையின் சரிவுகளை தழுவியபடி பெரிய உமிழ்வுகளின்போது அவற்றின் துவாரங்களிலிருந்து வெகுதொலைவிற்கு பயணிக்கின்றன.
1,200 °Cக்கு அதிகமாக உள்ள வெப்பநிலை பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தில் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது, அது அதன் தடத்திலுள்ள அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதோடு சேகாரமாகியிருக்கும் வெப்பமான பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தின் அடுக்குகளை பல மீட்டர்களுக்கு கெட்டியாக்குகிறது. அலாஸ்காவின் பத்தாயிரம் புகைபோக்கிகள் உள்ள பள்ளத்தாக்கு, 1912இல் காத்மைக்கு அருகாமையில் உள்ள நோவாரப்தாவின் உமிழ்வால் உருவானது, இது கெட்டியான பைரோகிளாஸ்டிக் ஓட்டம் அல்லது இக்னிம்பிரைட் சேகாரத்தின் உதாரணமாகும். போதுமான அளவிற்கு லேசானதாக உள்ள எரிமலை சாம்பல் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் உயர சென்று உமிழப்படுவது பல கிலோமீட்டர்களுக்கு பயணித்து சாம்பல்பாறையாக தரையில் விழுகிறது.
உமிழப்பட்ட மாக்மா 52–63% சிலிக்காவைக் கொண்டிருந்தால், அந்த எரிமலைக்குழம்பு இடைநிலைக் கலவை எனப்படுகிறது.
இத்தகைய "ஆண்டெசிடிக்" எரிமலைகள் சாதாரணமாக ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேல் மட்டுமே ஏற்படுகின்றன (இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் மெராபி).
உமிழப்பட்ட மாக்மா 45%-52% சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு மாஃபிக் எனப்படுகிறது. ஏனெனில் இது அதிக அளவிலான மாக்னீசியத்தைக் கொண்டுள்ளது (Mg)) மற்றும் இரும்பு (Fe)அல்லது கருங்கல் வகை. இந்த எரிமலைக்குழம்புகள் சாதாரணமாக ரையோலிட்டிக் எரிமலைக்குழம்பைவிட மிகக்குறைந்த பிசுபிசுப்புத் தன்மையுடனே இருக்கும், அவற்றின் உமிழ்வு வெப்பநிலையைப் பொறுத்து பெல்சி்க் எரிமலைக் குழம்புகளைவிட வெப்பமாகவும் இருக்கும். பரந்த அளவிலான அமைப்புக்களில் மாஃபிக் எரிமலைக் குழம்புகள் ஏற்படுகின்றன:
இரண்டு கடல் அடுக்கு தனி்த்தனி துண்டுகளாக பிரியும் மத்திய கடல் முகட்டில் அந்த இடைவெளியை நிரப்ப பஸால்டிக் எரிமலைக் குழம்பு பெருத்த துண்டுகளாக உமிழப்படுகிறது;
கடல் மற்றும் கண்ட மேல்ஓடு ஆகிய இரண்டிலும் உள்ள கவச எரிமலைகளில் கண்ட கருங்கல் வெள்ளமாக உள்ள இடத்தில்.
சில உமிழப்பட்ட மாக்மாக்கள் 45% சிலிக்காவைக் கொண்டிருப்பதோடு அல்ட்ராசல்பூரிக் எரிமலைக்குழம்பையும் உருவாக்குகிறது. கொமேடியாட் என்றும் அறியப்படுகிற அல்ட்ராசல்பூரிக் ஓட்டங்கள் மிகவும் அரிதானவை; உண்மையில், கிரகத்தின் வெப்ப ஓட்டம் அதிகமாக இருக்கும்போது பூமி உருவான துவக்க காலத்திலிருந்து அதன் மேற்பரப்பில் மிகச்சிலவே உமிழ்ந்துள்ளன.
அவை வெப்பமான எரிமலைக்குழம்புகள் என்பதுடன், சாதாரணமான மாஃபிக் எரிமலைக்குழம்புகளைவிட மிகவும் நீர்மத்தன்மை வாய்ந்தவையாக இருந்திருக்கக்கூடும்.


வெவ்வேறு எரிமலை வாயுக்களின் செறிவுகளும் ஒரு எரிமலையிலிருந்து மற்றதற்கு குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுகிறது. நீர் ஆவியாதல் என்பது கார்பன் டையாக்ஸைடு மற்றும் சல்பர் டையாக்ஸைடு ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் மிதமிஞ்சி இருக்கின்ற எரிமலை வாயு வகைமாதிரியாகும். ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் குளோரைடு, மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைடு ஆகியவை பிற முதன்மை எரிமலை வாயுக்கள். பெரிய அளவிலான சிறிய மற்றும் பீறிடும் வாயுக்கள் எரிமலை உமிழ்வுகளின்போது காணப்படுகின்றன, உதாரணத்திற்கு ஹைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு, ஹாலோகார்பன்கள், ஆர்கானிக் கலவைகள், மற்றும் ஆவியாகும் இயல்புள்ள உலோக குளோரைடுகள்.


பெரிய, வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் நீராவி (H2O), கார்பன் டையாக்ஸைடு (CO2), சல்பர் டையாக்ஸைடு (SO2), ஹைட்ரஜன் குளோரைடு (HC1), ஹைட்ரஜன் ப்ளோரைடு (HF) மற்றும் சாம்பல் (தூளான மற்றும் மென்மையான பாறைகள்) ஆகியவற்றை வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் பூமியின் தளத்திற்கும் மேலே 16–32 கிலோமீட்டர்களுக்கு (10–20 மைல்கள்) வீசியெறிகிறது. இவ்வாறு வீசப்படுவதிலிருந்து வரும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள், செறிவான சல்பேட் சாரல்களை உருவாக்குகின்ற வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் விரைவாக கெட்டிப்படுத்துகின்ற சல்பர் டையாக்ஸைடு சல்பூரிக் அமிலமாக (H2SO4) மாற்றப்படுவதிலிருந்து வருகிறது. இந்த சாரல்கள் பூமியின் அல்பிடோவை-சூரியனிலிருந்து வரும் இதன் கதிரியக்க பிரதிபலிப்பு விண்வெளிக்கு திரும்புகிறது- அதிகரிக்கச் செய்கிறது, ஆகவே இது பூமியின் தாழ்வான காற்றுமண்டலம் அல்லது அடிவெளிப்பகுதியைக் குளிர்விக்கிறது; இருப்பினும், அவை பூமியிலிருந்து மேல்நோக்கிப் பரவும் வெப்பத்தை உறி்ஞ்சவும் செய்கின்றன, அவ்விடத்தில் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியை வெப்பப்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு உமிழ்வுகள், ஒன்றிலிருந்து இரண்டு வருட காலகட்டத்தில் அரை டிகிரி வரை (பாரன்ஹீட் அளவுகோலில்) பூமியின் மேல்தளத்தில் உள்ள சராசரி வெப்பநிலையின் வீழ்ச்சிக்கு காரணமானது -இந்த சல்பேட் சாரல்கள், வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் உள்ள குளோரைன் மற்றும் நைட்ரஜன் ரசாயன உயிரினங்களை மாற்றுகின்ற அவற்றில் மேல்தளங்களில் உள்ள சிக்கலான ரசாயன மாற்றங்களை அதிகரிக்கிறது. இந்த விளைவு, குளோரோப்ளோரோகார்பன் மாசுபாட்டிலிருந்து அதிகரித்த வாயுமண்டலத்திற்கு மேலுள்ள குளோரின் உடன் சேர்ந்து, ஓஸோன் (O3) பகுதியை அழிக்கின்ற குளோரின் மோனாக்ஸைடை உருவாக்குகிறது.
சாரல்கள் அதிகரித்து கெட்டிப்படுகையில், அவை சுருள் இழை மேகங்களுக்கான பிளவாக செயல்படுகின்ற மேல் அடிவளியில் குடியேறிவிடுகின்றன, அதற்கும் மேல் பூமியின் கதிரியக்கச் சமநிலையை மேம்படுத்துகிறது.
பெரும்பாலான ஹைட்ரஜன் குளோரைடு (HCl) மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைட (HF) ஆகியவை உமிழப்படும் மேகத்திலுள்ல நீர்த்திவலைகளில் கரைந்து அமில மழையாக விரைவாக தரையில் விழுகின்றன. தூண்டப்பட்ட சாம்பலும் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியிலிருந்து விரைவாக விழுகிறது; இவற்றில் பெரும்பாலானவை சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள்ளாக நீக்கப்படுகின்றன. இறுதியில், வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் பசுமையில்ல வாயுவான கார்பன் டையாக்ஸைடை வெளியிடுகிறது, இது பயோஜியோகெமிக்கல் சுழற்சிக்கான கார்பன் மூலாதாரத்தை வழங்குகிறது.
எரிமலைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் அமில மழைக்கு இயல்பான பங்களிப்பாளராக இருக்கின்றன. எரிமலைச் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 130 முதல் 230 டெராகிராம்கள் வரையிலான கார்பன் டையைக்ஸைடை வெளியிடுகிறது. எரிமலை உமிழ்வுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள்ளாக சாரல்களை தூண்டக்கூடும். பெரிய தூண்டல்கள் வழக்கத்திற்கு மாறான வண்ண அஸ்தமனம் போன்ற காட்சி அம்சங்களுக்கு காரணமாகலாம் என்பதோடு உலகளாவிய தட்பவெப்பத்தை குளிர்வித்து பாதிக்கச் செய்யலாம். எரிமலை உமிழ்வுகள் எரிமலைப் பாறைகளின் தட்பவெப்பநிலை நிகழ்முறை மூலமாக மண்ணில் புரதங்களை அதிகரிக்கச் செய்யும் பலனை வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இத்தகைய உரமேற்றப்பட்ட மண் செடிகளும் பல்வேறு பயிர்களும் வளர்வதற்கு உதவுகின்றன. எரிமலை உமிழ்வுகள், மாக்மாக்கள் தண்ணீருடன் சேர்ந்து குளிர்வித்து கெட்டிப்படுத்துகையில் புதிய தீவுகளையும் உருவாக்கக்கூடும்.


இனி ஐஸ்லாந்து எரிமலை பற்றி பார்ப்போம்.
ஐரோப்பாசிய கண்டத்தகடையும் வட அமெரிகக்க கண்டத்தகடையும் பிரிக்கும் மத்திய அட்லாண்டிக் முகட்டுத்தொடரின்(Mid-Atlantic ridge) மேல் இந்த ஐஸ்லாந்து நாடு அமைந்துள்ளது. கண்டத்தகட்டுகளைப் பிரிக்கும் இது போன்ற ஆழ்கடல் முகட்டுத்தொடர்களில்தான் புவியின் உள்ளிருந்து வெளியே வரும் கற்குழம்பை கக்கும் முகத்துவாரங்கள் எரிமலைகளாக அமைந்துள்ளன. ஏறத்தாழ 35 செயலில் இருக்கும் எரிமலைகளை உள்ளடக்கிய ஐஸ்லாந்து தீவில் ஹெக்லா, காட்லா மற்றும் கிரிம்ஸ்வோத்ன் என்ற மூன்று பெரிய எரிமலைகல் மத்திய அட்லாண்டிக் ஆழ்கடல் முகட்டுத்தொடரில் அமைந்துள்ளன. ஐஸ்லாந்தில் மக்கள் குடியேற்றம் ஏற்பட்ட பிறகு எரிமலை வெடிப்பில் மிகப்பெரியது கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கிரிம்ஸ்வொத்ன் எரிமலையும் லாகி என்ற மற்றொரு எரிமலையும் ஒரே சமயத்தில் வெடித்ததுதான். 1783 முதல் 1785 வரை லாவாக் குழம்பைக் கக்கி கால்வாசி மக்களை காவு கொண்டது மட்டுமல்லாமல் , எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பல் மேகம் விவாசாயத்தைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மண்ணையும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றியது.
தற்போது இரண்டு முறை வெடித்து இருக்கும் ஈயபியலக்யுல்(Eyjafjallajökull) என்ற எரிமலைதான் ஐரோப்பாவின் இன்றைய அசாதாரணமான நிலைக்கு காரணம். இந்த வருடம் மார்ச் 14 ஆம் நாள் தன் உமிழ்வைத் துவங்கிய இந்த எரிமலை, சிறிய இடைவெளிக்குப்பின் ஏப்ரல் 14 ஆம் தேதி சற்றேப் பெரிய அளவில் உமிழத் தொடங்கியதானால் ஏற்பட்ட சாம்பல் மண்டலம் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 20,000 அடிகள் உயரத்திற்கு மேலே பரவி வான்வெளிப் போக்குவரத்தைப் பாதிப்பு அடையச் செய்துள்ளன.

Eyjafjallajoekull என்றால் மலைத்தீவின் பனியாறு எனப் பொருள்படும்(Eyja - தீவு, Fjall - மலை , Joekull - பனியாறு) இந்த எரிமலை இதற்கு முன் கி.பி 921, 1612, 1812-13 ஆம் ஆண்டுகளில் கற்குழம்பை வெளியிட்டபொழுதெல்லாம், அதனைத் தொடர்ந்து இதன் அருகாமையில் உள்ள இதைவிட பெரிய எரிமலையான காட்லாவும் உமிழத் தொடங்கி இருக்கின்றது. புவியியல் ஆய்வாளர்கள் அடுத்து காட்லா எப்பொழுது தனது உமிழ்வைத் தொடங்கும் என நோக்கத் தொடங்கி உள்ளனர். காட்லா இதுவரை அமைதியாகவே இருந்து வருவது ஆறுதலான விசயம். 40 - 80 வருடங்களுக்கு ஒரு முறை வெடிக்கும் காட்லா கடைசியாக சிறு அளவில் வெடித்தது 1950 களில். ஐரோப்பாவின் உயரமான எரிமலைகளில் ஒன்றான காட்லாவின் வாய்ப்பகுதி 10 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்டது. இது கற்குழம்பைக் கக்கத் துவங்கினால் பனியாறு உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

காட்லாவும் மற்றொரு எரிமலை ஹெக்லாவும் அருகருகே காணப்படுகின்றன. ஹெக்லா கடைசியாக வெடித்தது. 1947-48 ஆம் ஆண்டுகளில். இந்தக் வெடிப்பு கிட்டத்தட்ட 11 மாதங்கள் நீடித்தது.ஹெய்ம்சே என்ற மீன்பிடி தீவில் இருக்கும் எல்ட்பெல் எரிமலை 1973 ஆம் ஆண்டு வெடித்த பொழுது கிட்டத்தட்ட 400 வீடுகள் வெளிப்பட்ட லாவாக்குழம்பில் மூழ்கிப்போயின. ஆனால் அதற்கு முன்னர் அங்கு வசித்த கிட்டத்தட்ட 5300 நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். க்ரிம்ஸ்வோத்ன் எரிமலை 1996 ஆம் ஆண்டு தான் வெடித்ததோடு மட்டுமல்லாமல் தன் வெளிப்புறம் ஓடிக்கொண்டிருந்த பனியாற்றையும் வெடிக்க செய்தது. இதே எரிமலையில் 2004 ஆம் ஆண்டு வெடிப்பில் வெளிப்பட்ட சாம்பல் 12 கிலோ மீட்டர்கள் வரை உயர்ந்து காற்று மண்டலத்தில் கலந்தது.

எரிமலையின் ஆங்கிலப்பதமான Volcano, வால்கன் என்ற ரோமானியர்களின் நெருப்புக்கடவுளைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது. எரிமலைகள் வெறும் புவியியல் மாற்றத்தையும் தட்பவெப்ப நிலைமற்றங்களை உருவாக்கிவிட்டு மட்டுமே செல்வதில்லை. மக்களின் இடம்பெயர்வு, புதியத் தேவைகளுக்கான தேடல்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரும் எரிமலை வெடிப்பான இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு நிகழ்வின் தொடர்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் வரலாறு காணாத பஞ்சத்தை ஐரோப்பாவில் ஏற்படுத்தியது. கந்தக அமிலம் கலந்த எரிமலை சாம்பல் மேகங்கள் புவியைச் சூழ்ந்து சூரிய வெப்பத்தையும் ஒளியையும் சிதறடித்து பூமியைக் குளிரச்செய்துவிடும்.

வரலாற்றின் ஏனைய எரிமலை வெடிப்புகளை ஒப்பிடும்பொழுது, இந்த ஈயபியலக்யுல் எரிமலை வெடிப்பு அளவில் மிக மிகச் சிறியவை. பரபரப்பான வான்பரப்பில் மையத்தில் இந்த எரிமலை வெடிப்பு நிக்ழந்ததனால், வெடிப்பின் சாம்பல் துகள் பரவல் 20 ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்பரப்பில் விமானப்போக்குவரத்தை நிறுத்த செய்துள்ளது. பல்கேரியா, கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைத் தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே பகுதியளவிளாவது பாதிக்கப்பட்டுள்ளன. பனிக்கட்டிகள் உருகிய தண்ணீருடன் கற்குழம்பு கலந்து உமிழ்வு ஏற்படுவதால் சாம்பல் வெளிப்பாடும் அதிக அளவில் இருக்கின்றது. அடுத்தச் சில நாட்களுக்கு எரிமலை வெடிப்பு நிற்கப்போவதில்லை என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் வெடிப்பு தற்போது குறைந்துள்ளதாக அறியப்படுகிறது.ஆனால் காட்லா தற்போது வெடிக்கும் நிலையில் காணப்படுகிறதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

நுண்ணிய சாம்பல் துகள்கள் ஜெட் விமான எஞ்சினை குளிர்விக்கும் துவாரங்களை அடைத்துக்கொண்டு 2000 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் செயற்படும் எஞ்சின்களை நிறுத்திவிடும். 1982 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் மேல் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பயணிகள் விமானம் இதே பிரச்சினையில் சிக்கியது. சாம்பல் மேகங்களை விட்டு நகர்ந்து எஞ்சின்களை திரும்பவும் இயக்கத் தொடங்கிய பொழுது விமானம் விபத்தில் இருந்து காப்பற்றப்பட்டது.
தற்பொழுது 18000 அடிகளில் இருந்து 35000 அடிகள் வரை சாம்பல் மேகங்கள் சில ஆயிர சதுர கிலோமீட்டர்களில் விரவி இருப்பதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளைட் 8 போலவோ அல்லது அலஸ்காவின் மேல் எரிமலைச் சாம்பல் துகள்களின் ஊடாகப் பறந்த கே.எல்.எம் 867 போலவோ அவ்வளவு எளிதாக சாம்பல்கள் எஞ்சின்களில் சிக்கினாலும் தப்பித்து ஓட்டிவிடலாம் என அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதனால் தான் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.