Saturday, January 22, 2011

காலவன்....( காவலன்.)

சுமார் 35 கோடி இந்திய ரூபாய் பட்ஜெட்டில் கோடி பிரச்சனைகள் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு பட்டைய கிளப்ப போற படம்தான் நம்ம இளைய தளபதியின் காவலன். அசின், ராஜ்கிரண், வடிவேலு இருக்கீணம். ஸோ... படம் ஹிட்டாகுறது உறுதியோ உறுதிங்க ..
விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக்.
ஆனாலும் பாக்சிங்கில கைக்கு உறை போடமல் மறந்துபோய் விளையாடினது நம்ம விஜய் தாங்கன்னா.
ஏதோ நல்ல காலத்துக்கு விஸயின்ர ஓபினிங் சோங் கிட்டத்தட்ட 30 நிமிசத்துக்கு பிறகு வருது. அதுவும் ராஜ்கிரணை போற்றி பாடுற மாதிரியே வந்திருக்கு.
இனி கதைக்கு வருவம்.
வழக்கம் போல இதிலயும் வெட்டியா சுத்துற பயலாவே காட்டுறாங்க. விஜயின்ர மாமா விஜயை ராஜகிரணிட்ட சேக்கிறதுக்காண்டி பொய் சொல்லி (ராஜ்கிரணின்ர உயிருக்கு ஆபத்து இருக்கிண்ணு.) இதுக்கு முதல் ஓபினிங்ல ராஜ்கிரண் ஒரு கர்ப்பிணியை காப்பாத்தி ஆஸ்பத்திரில சேத்து அவாவுக்கு பிறக்கிற பிள்ளைக்கு பூமிநாதனுன்னு(விஜய்) பெயர் வைக்கிறார்.

அந்த பாசத்தில விஜய் ராஜிடம் சேர்ந்து குடும்பத்தை காப்பாத்துறது. பிறகு ராஜின்ர பிள்ளை அசினுக்கு காவலுக்காண்டி அவாவோட காலேசுக்கு போறாரு….(காலேசுக்காமா!!!!!)
அங்க தான் நம்ம நகைச்சுவை தளபதி விஜய் வெளிப்படுறாரு!!!!. அங்க வடிவேலுவோட செய்யுற காமடி இருக்கே தாங்க முடியல…
காலேசுக்கு விஜய் பாடிகாட் ரெஸ்ல வாறது அசினுக்கு பிடிக்கல அதால விஜயின்ர உடுப்ப மாத்துறதுக்காண்டி விஜயிக்கு போன் பண்ணுறதில இருந்து காதல் பத்திக்கிச்சு…..
பிறகென்ன நம்ம விஜய் காதலுக்கு மரியாதைல பாத்த மாதிரி ரொம்ப யூத் ஆகி!!!!! லுவ்ஸ் பண்ணுறாரு….( போனில கதைக்கிறது அசினுன்னு தெரியாமல்…. வோயிச வைச்சோயாமாம். முகத்தை பாக்காமல்…..)
இப்பிடியே போய் காலேச் எக்சாம் முடிஞ்சுது…..(பாசோ பெயிலோனு போடுறாங்க இல்ல) இந்த லவ்ஸ் ராஜ்கிரணுக்கு தெரிஞ்சு விஜயை அடிக்க அசினுக்கு பாசம் பிறந்து!!!! விஜயை யாரோ லவ் பண்ணீணமாம் அவாவ பாக்க விஜயை போகவிடுங்கணு அப்பா ராஜ்கிரணிட்ட விளக்கப்படுத்தி! விஜயை அனுப்பிறாங்க…
வீட்ட போய் அசின் தன்ர பிரண்டை விஜயிட்ட அனுப்பி உண்மையை சொல்ல சொல்லுறா. பிரண்டு அங்க போக விஜய் அவா தான் தன்னட்ட போனில கதைச்சதுண்ணு நம்பி அவளை கலியாணம் செய்யுறாரு…. பிள்ள பிறக்குது…. தாய்; இறந்துட்டாங்க…..
பிறகு வெளிநாடு போய் பெரிரிரிய பணக்காரனா ராஜ்கிரணிட்ட வருவார். அங்க அசினு கல்யாணம் செய்யாமல் காத்திருப்பாங்களாம். விஜயின்ர பிள்ளை தன்ர அம்மான்ர டயறியை படிச்சு உண்மைய எல்லாம் தெரிஞ்சு அசின அம்மானு கூப்பிட்டு பிறகு விஜய் அசின கல்லாயம் பண்ணி ரயினில போறாரு…..
சரி படம் முடிஞ்சுது….. 200ருபா தந்துட்டு போங்க!!!!!!!!
-------------------------------------------------------------------------------------------
விஜயோட சேந்து வடிவேலு பண்ணுற காமடி தாங்க முடியல. ஓவ்வொரு விசயத்துக்கும் “”அவர் சொன்னார்.. ஆமா அதை அவர் சொன்னாரா இல்ல இவர் சொன்னாரானு”” சொல்லுறது சூப்பர்.
ஐந்து பாடல்களும் அருமை மனதில் நிற்கின்றது.
பட்டம்பூச்சி கூப்பிடும் போது…
யாரது…யாரது…
பாடல்கள் இனிமை மெலடி கிங் கலக்கியுள்ளார்
வித்தியாசகரின் கை வண்ணம் அபாரம்.

 
விஜய் தயவு செய்து மண்டைக்கு கலர் அடிக்காதீங்க. சகிக்கல.......மண்டைக்கு கலர் அடிக்கிற நேரம் மீசைக்கும் கலர் அடியுங்க!!!!

மொத்தத்தில் காவலன் காவலும் காதலும் சேந்த _______________________
ஏதாவது போட்டுக்குங்க....