Tuesday, November 15, 2011

சுயசரிதை ரொம்ப முக்கியம் நண்பர்களே!!!

மிக சிறந்த நாவல் படிக்க போகிறீர்களா? போய் முதலாவதாக வாங்குங்கள் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எழுதியவர்- அ.முத்துலிங்கம். ஈழத்து புலம்பெயர் எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். 1964 ல் அக்கா என்ற சிறுகதை நூலில் தொடங்கி திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்குவீதி, மகாராஜாவின் ரயில்வண்டி, அ.முத்துலிங்கம் கதைகள், அங்கே இப்ப என்ன நேரம், பூமியின் பாதிவயது என்ற வரிசையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற நாவல் 2008 ல் வெளியிடப்பட்டது. உயிர்மை பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. 
ஆசிரியர் உரையினை காலநதி என்ற பெயரில் எழுதியது தொடக்கம் ஒவ்வொரு வரியும் நகைச்சுவையும் உண்மையும்!!! ததும்பும் வண்ணம் காணப்படுகின்றது. அவனவன் எவ்வாறு சுயசரிதை எழுதுகிறான் என்பதை காலநதியில் கூறுவதை வாசித்த பின் யாரும் முழுமையாக இப்புத்தகத்தை வாசிக்காமல் விடமாட்டார்கள்.

இப்புத்தகத்தை படித்தபின் நீங்களும் சுயசரிதை எழுத தொடங்கி விடுவீர்கள்.

No comments:

Post a Comment