1. என்னில் பூரணமாய் நீ நிறைந்திருக்கிறாய்.
என்னில் உனக்கென பெருகும் உணர்வுகளை நான் மட்டுமே அறிவேன்.
ஆனால் சொற்களில் செயல்களில் என்றுமே
வெளிவரப் போவதில்லை.
இத்தனை அன்பையும் என்னுள் தேக்கி
உள்ளத்தின் ஆழத்தில் ஊமையாய் அழுகிறேன்........
2. பழகி வந்த புதிய முகம் பாதியிலே மறைந்தாலும்
எழுதிவைத்த ஓவியம் போல் என்றென்றும்
என் நெஞ்சில் நீங்காமல் நீயிருப்பாய்.....
3. பழகுவது பலபேருடன் புரிவது சிலரைத்தான்.
புரிந்தே பழகினால் பிரிந்துவிட முடியுமா?????
4. பலகாலம் காத்திருந்தேன் நீ வருவாயென
காத்திருந்து காலம் கரைந்ததே தவிர காலம் கனியவில்லை....
5. காதல் என்பது தேன்கூடு கட்டுவது என்பது பெரும்பாடு.
இருவர் நினைத்தால் கைகூடும்.
ஒருவர் மறுத்தால் மனம் வாடும்.
6. என் இனியவளின் முழுமதியால் பொர்ணமியும் அமாவாசையானது.
7. பெண்ணே உனக்கு மனமில்லையா?
ஏன் நோகடிக்கிறாய் ஹைஹீல்ஸால்?????
8. கண்ணோரம் கண்ணீர் துளிகளோடு கரைந்தது
என் காதல் காவியம்.......
No comments:
Post a Comment